Sunday, April 12, 2009

மழலைத் திருட்டு

சைதை பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த ரிட்டயர்டு post master சுவாமிநாத ஐயர் வீட்டில் அன்று வழக்கத்திற்கு அதிகமாகவே பரபரபரப்பு காணப்பட்டது. காலை 7 45 மணிக்கு இரு பக்கமும் லன்ச் பேக்களும் புத்தக மூட்டைகளும் சுமந்து 7 குழந்தைகளை அடைத்தபடி ஒரு ஆட்டோ அவ்வீட்டின் முன் வந்து நின்றது. ஆட்டோ சத்தம் கேட்ட சுவாமிநாத ஐயர் வெளியே வந்து 'இன்னிக்கு பேத்தி லீவு போ போ' என்றார். ' இன்னா சார் பாப்பாவுக்கு ஒடம்பு எதுன்னா சரில்லியா' என்று ஆட்டோ டிரைவர் கேட்டான். 'கழிசடை கழிசடை உன் வாயிலே சீமெண்ணெய்ய ஊத்தி கொழுத்த, போடா' என்று அவனை விரட்டிவிட்டு மீண்டும் வீட்டினுள் நுழைந்தார். அங்கேஅவர் மனைவி சுலோச்சனா பேத்தி கீர்த்தனாவின் வாயில் தயிர் சாத்தை திணித்து கொண்டிருந்தார், மகன் சுந்தரம் அவள் கால்களில் சாக்ஸ் அணிவித்து கொண்டிருந்தார், மருமகள் ஜானகி அவளின் சடையை வாரிக் கொண்டிருந்தாள் . 'என்ன சுலோச்சனா இன்னும் முடியலையா ?' என்று கேட்டார் . 'பார்த்துண்டே இருந்த எப்பிடி ரெடி ஆறது ? சத்த அவ கைல நைல் போலிஷ் போட்டு விடுங்கோ' என்றாள். சுவாமிநாத இஎர் உடனே நைல் போலிஷ் போடத் தொடங்கினார், 'சத்த கைய ஆட்டாத இருடிம்மா , எங்கெங்கோ கோலம் போடுண்டிருகேன் நான்' என்றார் . 'தாத்தா நான் ஒன்னும் கைய ஆடலை, உன் கை தான் நடுங்கறது' என்றாள் அந்த ஆறு வயது சிறுமி. 'பெரியவாள அப்பிடி எல்லாம் பேசப்படாது' என்று கூறி சடையை ஒரு இழு இழுத்தால் ஜானகி. ஒரு வழியாக அந்த குழந்தயை கைமா காலமா செய்த பிறகு அவள் முகத்தில் ரோஸ் powder ஐ அப்பத் தொடங்கினால் ஜானகி. 'இதெல்லாம் எதுக்குடிம்மா?' என்ற சுலோச்சனாவைப் பார்த்து ' உங்களுக்கு ஒன்னும் தெரியாது அதை இதெல்லாம் போட்ட தான் டிவி ல பளிச்னு தெரிவா' என்றாள் ஜானகி. ' பெரியவாள பாது இப்படியெல்லாம் பேசப்படாது ' என்று கூறி ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தாள் கீர்த்தனா , கௌசல்யாவும் சிரித்தாள்.

' இந்த சாமர்த்தியத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, எங்கே ஆரம்பத்துல என்ன சொல்லுவா சொல்லு' என்றாள் ஜானகி. 'எத்தன வாடி கேப்பெள், இன்னிக்கு டென் தௌசந்து டைம்ஸ் சொல்லிட்டேன்' என்று சற்று அலுத்துக் கொண்டு சற்று குரலை செரி செய்து கொண்டு ' வணக்கம் இந்த மழலை கூத்தாடி நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் வணக்கம், என் பெயர் கீர்த்தனா' என்று கூறிவிட்டு 'கண்ட நாள் முதலாய்' பாடலை பாடி முடித்தாள் .'நன்னா பாடற இதே மாறி அங்கேயும் பாடு ' என்று கூறி பேத்தியை முத்தமிட்டாள் பாட்டி. 'ஐயோ பவுடர் கலயறது' என்று கூறி மீண்டும் பவுடர் அப்பினாள் ஜானகி. 'இதெல்லாம் பத்தாது,maththa குழந்தைங்க டிவி ல பாடறதா பாதிருகேலோன்னோ . இன்னும் கொஞ்சம் பிருகா போட்டு அங்கங்க improvise பண்ணி low notes எல்லாம் கரெக்ட் பாடணும். vibrato எல்லாம் சரியா விழலை , சுருதி சரணத்துல கொஞ்சம் அடம் பிடிக்கறது ' என்றாள். 'என்னடி இவ என்ன எம் எஸ் சுப்புலக்ஷ்மியா , நீ சொல்றது உனக்கு மொதல்ல புரியறதா?' என்று கேட்டாள் பாட்டி. 'எல்லாம் கேள்வி ஞானம் தான், டிவி ல உன்னி கிருஷ்ணன் சொல்றாரே' என்றாள் ஜானகி.

சுந்தரம் அழைத்து வந்த taxi யில் மேக்கப் சாமான்களையும், சீரகத் தண்ணீர் பர்லே வாட்டர் போன்ற சமாச்சாரங்களையும் எடுத்துக் கொண்டு AVM studio வய் நோக்கி விரைந்தனர். AVM ஸ்டுடியோவில் பங்கேற்பாளர்கள் பலர் முன்னரே வந்து அமர்ந்திருந்தனர், சுந்தரம் Q வில் நின்று டோக்கன் வாங்கினான். 210 ஆம் எண் தான் அவர்களுக்கு கிடைத்தது. வாங்கிய பிறகு அனைவரும் ஒரு பெரிய ஹாலிற்கு சென்றனர். அங்கிருந்த குழந்தைகள் நறுமுகையே முதல் பெட்டரப் பாடல் வரை பல தரப்பட்ட பாடல்களை ஜபித்துக் கொண்டிருந்தனர். அந்த vibration ஜானகியை பேஜார் ஆகியது. அங்கிருந்த மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளி ஒருவர் ஏறி ' ஹாய் auditions are gonna start soon. Ten ten ah we will call the kuzhanthais. அவங்க பாடி mudichathum judges 5 minutes la results சொல்வாங்க. கூட வந்தவங்க can also go உள்ளார ' என்று செந்தமிழையும் ஆங்கிலத்தையும் உருட்டி பீடா போட்டதுபோல் பேசினார் . ' என்னடா இவளுக்கே இன்னும் மழலை போகலையே' என்ற சுவாமிநாத ஐயரின் ஜோக் அப்பொழுது எடுபடவில்லை .
காத்திருந்து காத்திருந்து மணி மதியம் 2 தொட்டது. கீர்த்தனாவை ஒரு பக்கம் தூக்கம் மறு பக்கம்ஜனகியும் தள்ளிக் கொண்டிருந்தனர். '190 - 200' என்றவுடன் ' ஹே ஹே அடுத்து நாம தான், பாடு எல்லாம் ஞாபகம் இருக்க்கா ?' என்றதற்கு பலமாக தலை ஆட்டினாள் கீர்த்தன. 'இந்தா ஜீரகத் தண்ணி குடி' என்று ஜானகி கொடுத்தாள். 'அம்மா பசிக்கிறது' என்றால் கீர்த்தன, 'கொஞ்சம் பொருடிம்மா, முடிஞ்சதும் சோலா பூரி வாங்கித் தரேன்' என்று அவளை சம்மதனப் படுத்திவிட்டு போட்டி நடக்கும் அரங்கத்திற்கு அனைவரும் சென்றனர். '200 - 210' உள்ளே வாங்க என்றதும் உள்ளே சென்றனர்.

குழந்தையை தனியே அனுப்பிவிட்டு பார்வையாளர்கள் இடத்திற்கு மற்றவர்கள் சென்றனர். பங்கேற்பாளர்கள் வந்து பாட ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன் பச்சை சிவப்பு என இரு நிற விளக்குகள் அமைக்கப் பட்டிருந்தது. மேடைக்கு முன் நடுவர்களாய் மூவர் அமர்ந்திருந்தனர். 'யார் இவ எல்லாம்' என்று ஜானகி சுந்தரத்திடம் கேட்டால். 'இவாளத் தெரியாத நோக்கு, அதோ வலப் பக்கம் இருக்காரே அவர் தான் மியூசிக் டைரக்டர் முருகவேல். இப்போகூட கஸ்மாலம், அமிஞ்சிக்கரை அம்சான்னெல்லாம் படத்துக்கு மியூசிக் போட்டர். நடுவால் ஜடை எல்லாம் போட்டுகுட்டு இருக்கறவர் பேர் கோல்டி. இங்கிலிஷா தமிழன்னே வித்தியாசம் தெரியாத மாதிரி ராப் எல்லாம் பாடுவார். 'do u wanna do காதல், இங்க வராத நான் ரொம்ப lethal' அப்பிடின்ன ஒரு ஹிட் பாட்டு போட்டிருக்கார். மூணாவது ஆளு..' என்றதும் ஜானகி அவனை நிறுத்தினாள். 'எப்பிடியும் தெரியப் போறது இல்லை விட்டுருங்கோ' என்றாள்.

போட்டி தொடங்கியது, 201 என்று அழைத்தும் சிறுவன் ஒருவன் மேடை ஏறி 'தத்தை தத்தை' என்று பாடி பாடினான். இது போல 208 வரை முடிந்தது. மூவர் தேர்வாகி இருந்தனர், நிச்சயம் அவர்களை விட கீர்த்தனா சிறப்பாக பாடுபவள் என்பது ஜானகியின் தாழ்மையான கருத்து. 209 என்றதும் மேடை ஏறிய சிறுமி 'கண்ட நாள் முதலாய் எனப் பாடியாதும் ஜானகி அண்ட் co மற்றும் கீர்த்திக்கு பகீர் என்றது. 'கீர்த்தி உன்னைய பார்த்துண்டு இர்ருக்க, நீ தைரியமா இருந்தா தானா அவ பாடுவா' என்றார். ஜானகியும் 'பயமில்லை தைரியமாப் பாடு' என்பது போல் சைகை செய்தாள்.

பாடிய க்சிருமிக்கு பச்சை விழாக்கு எறிந்தது. கீர்த்தி மேடை ஏறி 'கண்ட நாள் முதலாய்' என்றவுடனே 'stop stop' என்றார் கோல்டி. 'she sang it just now la, வேற paattu ஏதாவது பாடேன்' என்றார். 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடலில் சில வரிகளை பாடினால் கீர்த்தி. 'ok unakku fast ah எதோ தெரியுமா' என்று கேட்டார் முருகவேல். ' ஓடத் தெரியும்' எனப் படார் என பதில் சொன்னாள் கீர்த்தி. சுவாமிநாத ஐயர் மட்டும் சிரித்தார். 'இல்லம்மா fast ah பாத்து எதோ தெரியுமா, 'மலை மலை' அது மாதிரி' என்றார் முருகவேல். 'தெரியாது' எனக் கூறி தலை ஆடினால் கீர்த்தி. 'கீர்த்தனா we are looking for exuberance, showmanship, life, energy etc etc. got it? ' என்ற மூன்றாவது நடுவர். கீர்த்தனா பேய் அடித்தார் போல் நின்றால் கீர்த்தனா. சிவப்பு விழாக்கு எறிந்தது.

கீர்த்திக்கு அழுகை பீறிட்டு வந்தது , ஜானகி அவளை தூக்கிக் கொண்டு வேகமாய் வெளியேறினாள். தாய் செய் இருவரையும் கேமரா ஏந்திய ஒருவரும் நிகழ்ச்சி தொகுப்பாளியும் துரத்தி துரத்தி bytes பிடிக்க முயற்சி செய்தனர். ஜானகி தன் வயித்தெரிச்சல் அனைத்தையும் கேமரா முன் கொட்டினாள். எப்படியோ கேமரா விடமிருந்து தப்பி அனைவரும் வெழியே வந்தனர்.

வெளியே வந்து சுதாரித்துக் கொள்ளவே பத்து நிமிடங்கள் ஆயின. 'அநேகமா இதை program advertisement la போட்டு background music எல்லாம் போடுவான்னு நினைக்கிறேன்' என்றார் சுவாமிநாத ஐயர். 'நீங்க இருந்தா ஞாபகப் படுதிக்கிட்டுருப்பீங்க, பொய் சாப்பாடு வாங்கிட்டு வாங்கோ' என்று அவரை அனுப்பி வைத்தார் பாட்டி.

சாப்பிடும்போது 'இவளுக்கு என்ன செய்யணும்னே தெரியல, எவ்வளவு ஆசை ஆசையா வந்தேன்' என்று தொடர்ந்து புலம்பினாள் ஜானகி. நடந்து முடிந்தது என்னவென்றே தெரியாதது போல் புள் தரையில் பட்டாம்பூச்சி ஒன்றை துரத்திக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

Saturday, October 11, 2008

உடல் மண்ணுக்கு உயிர் உனக்கு !

நடிகர்கள் என்றவுடனே நினைவிற்க்கு வரும் ஒரு முக்கியமான விஷயம் ரசிகர் மன்றங்கள். திரைப்படம் வெளியானதும் cutout வைத்து ,கொடி ஏற்றி , பால் அபிஷேகம் செய்து , சூலம் ஏற்றி அங்கப் பிரதர்சனம் செய்து அப்பப்பா யார் தொடங்கியதோ தெரியவில்லை சமீபத்திய தர்மபுரி மாவட்டட தலைமை சாந்தனு ரசிகர் மன்றம் வரை ஒவ்வொரு நடிகனுக்கும் பற்பல ரசிகர் மன்றங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன . இன்று இணையதளத்தின் மூலம் ரசிகர் மன்றங்கள் ஒரு புதிய உருவம் பெற்றுள்ளன . குறிப்பாக ஆர்குட்டில் ஏதேனும் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் நம்முள் பலர் அங்கதனரக நிச்சயம் இருக்கிறோம் . நானும் சற்று நாட்களுக்கு முன் வரை எனக்கு மிகப் பிரியமான இரு நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனின் ஆர்குட் ரசிகர் மன்றங்களில் அங்கத்தினராய் இருந்தேன் . இவ்விரண்டும் 50000 கும் மேல் ரசிகர்களைக் கொண்டவை . 
இவற்றில் நான் ஒரு முறை கூட பங்கு கொண்டதில்லை என்றபோதும் அவற்றில் ஏனோ தொற்றிக் கொண்டிருந்தேன் . சமீபத்தி இவற்றில் விவாதிக்கப்படும் விஷயங்களை கவனித்தபோதுதான் தெரிந்தது ரஜினியின் communitykku 'anti கமல்' community என்றும் கமலின் கம்ம்யுநிட்டியை 'anti ரஜினி ' community என்றும் பெயரிடிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று. ரஜினி communityin அங்கத்தினர்கள் கமலையும் கமல் communityin அங்கத்தினர்கள் ரஜினியையும் பல எழுத முடியாத பெயர்களைக் கொண்டு பிரியமாக அழைக்கின்றனர் . குசேலன் திரைப்படம் வெளியான அன்று ரஜினி communityil ஒருவர் எழுதியிருந்தார் 'ஒரே வார்த்தைல சொல்லனும்னா படம் அற்புதம் ' என்று . சாயம் வெளுத்து படம் ஊத்தி மூடியதை அடுத்து ஒருவர் கேட்டிருந்தார் குசேலனை ரஜினியின் தோல்வி என்று எடுத்துக் கொண்டால் பார்த்தாலே பரவசம் திரைப்படத்தை கமலின் பெரிய தோல்வி என்று ஏற்க வேண்டும் என்று . சமீபத்தில் தசாவதாரம் நூறு நாட்களை கடந்ததை அடுத்து ஆல்பர்ட் theatreil உள்ள ரஜினியின் சுவரொட்டிகள் மீதெல்லாம் கமலின் சுவரொட்டிகள் ஒட்டியதாக ஒருவர் கமல் communityil மார்தட்டிக் கொள்ள , அதற்க்கு இன்னொருவர் 'சபாஷ் எதிரியின் கோட்டைக்கே சென்று கொடி நாடுவிட்டோம்' என்று பெருமிதம் கொண்டார் . இதை அடுத்து போதும்டா சாமி என்று இரண்டு communitygalilirunthum வெளியே வந்து kamal+rajini என்று community search கொடுத்த போது ajith = rajini+kamal என்ற ஒரு community கிடைத்தது , சேரலாம்னு இருக்கேன். 
சமீபத்தில் 'ராமன் தேடிய சீதை' படம் பார்க்க சென்ற போது theatrein வெளியே 'யதார்த்த நாயகன்' சேரன் ரசிகர மன்ற banner ஐ பார்க்க நேர்ந்தது , அப்போது ஒரு சிந்தனை தோன்றியது, படம் முடியும் போது சேரனை சுற்றி படத்தின் இயக்குனர் மற்றும் ஆப்ரிக்கா உடை அணிந்த நடனக் கலைஞர்கள் சேர்ந்து ஆடிப்பாடுகிறார்கள் ...என்ன பாட்டா? .. யதார்த்த நாயகனே டன் டன் டன் டன் டன் ..

Tuesday, July 8, 2008

முதலில் நனைந்த மழை


மழை என்றால் மேலிருந்து தண்ணீர்

நிற்காமல் வருமாம்

அந்த மாயத்தை இதுவரை

கண்டதில்லை நானும்


ஊரிலுள்ள தண்ணீர் குழாய்கள் அனைத்தும்

வற்றிய போதும்

இன்றுவரை வற்றவிலை என் தாயின்

கண்ணீர் குழாய்கள்


வானம் பார்த்து வானம் பார்த்து

சலித்த எங்கள் நிலங்கள்

மாறி வருகின்றன எங்கள்

விவசாயிகளின் இடுகாடுகளாய்


எங்கள் மனங்களைப் போல்

எங்கள் நிலஙளும் வெடி

வைத்தார் போல்

பிளந்து கிடக்கின்றன


விவசாயிகள் விவசாயத்தை மறக்கும் நிலை

ஏருகளில் இரும்பெல்லாம் துருபிடிக்கும் நிலை

நம்பிக்கையற்றுப்போய் பயிர்கள்

வானைக் காணமறுக்கும் நிலை


பல ஊர்களுக்கு அன்னமிட்ட

எங்கள் கிராமம்

இன்று நிற்கிறது திருவோடு

ஏந்தி


உழவர் திருநாளன்றும் இரண்டு

உழவர்கள் த்ற்கொலை

மாட்டுப் பொஙலன்றும்

பலமாடுகள் பட்டினி


எங்கள் மாடுகளுக்கு கொம்புகள்

கூட சுமையாயின

ஜல்லிக்கட்டு நடத்தியிருந்தால் அவைகளே

போரட்டம் நடத்தியிருக்கும்


நீர் வசதி இதோ வரும்

அதோ வரும் எனக் கூறி

வந்து சென்றன

இரு தேர்தல்கள்


ஆண்டிற்க்கிருமுறை மழை வர

யாகம் செய்தும் தணியவில்லை

எஙள் நிலங்களின்

தாகம்


மரம் வளர்த்தால் மழை

பொழியுமாம்

மரம் வளர்க்க மழை

வேண்டுமே!!


ஊருக்கு அப்பால் இருக்கிறது

தண்ணீர் கிணறு ஒன்று

நீர் கொண்டு வரும் வழியிலே

பாதி குடித்திடுவான் பகலவன்


தண்ணீரை சிக்கனமாய்ப் பயன்படுத்துவதில்

வல்லவர்கள் நாஙள்

காகஙளும் எங்கள் குளியலைக்

கண்டால் வாயைப் பிளக்கும்


எங்களை வைத்து மனித உடலின்

எலும்புகளை எண்ணி விடலாம்

காற்றை மட்டும் சுவாசிது

வாழும் ஜீவஙள் நாஙள்


நாளிற்க்கிருமுரை வானையும் மண்ணையும்

வணங்கிய எங்கள்

தாதாவிற்க்கு கூன் விழுந்தது

தான் மிச்சம்


அவர் மாண்டபொது

அவருடனே மாண்டன

நிலத்திலும் விவசாயத்திலும் இருந்த

எங்கள் நம்பிக்கை


நிலத்தை ஜமீந்தாரிடமும் மாடுகளை

கசாப்புக் கடையிலும் விற்றோம்

மிஞ்சியிருந்த எஙள் சொத்தை மூட்டைக் கட்டினோம்

ஒரு சிறிய மஞ்சள் பையில்


மாடுகளை விற்ற நாஙள்

ஆயத்தமானொம்

அடி மாடுகளாய் வேலை

செய்ய


பேருந்திற்காக காத்திருந்தபோது ஓர்

பெரும் ஓசையைக் கேட்டேன்

என் வாழ்வில் முதல் முறையாக

வானிலிருந்து நீர் வடிவதைக் கண்டேன்


மழையைக் காணமாட்டேன் என

தன் இரு கண்களையும்

பொத்திக் கொண்டார் என்

அப்பா


என் தாயின் முகத்தை மழை

நனைத்ததில்

அவள் கண்ணீர் எனக்குத் தெரியாமல்

போனது


திரும்பி செல்ல எங்களிடம்

நிலமில்லை மாடுகளில்லை

உடலில் வலுவில்லை முக்கியமாக

விவசாயத்தில் நம்பிக்கையும் இல்லை


ஏற்கனவே நிறம்பியிருந்த பேருந்தில்

நாங்களும் ஈக்களாய் தொற்றிக் கொண்டோம்

ஒழுகும் மழை நீரைக் கையிலேந்தி

விளையாடிய தம்பியை அரைந்தார் அப்பா


நடத்துனரிடம் நனைந்த ரூபாய்

நோட்டுகளைக் கொடுத்து

எவ்வளவு தொலைவு செல்ல முடியுமோ

செல்லச் சொன்னார்


தண்ணீர் பஞ்சத்திற்க்கு அஞ்சி

தஞ்சம் புகுந்த

புது ஊரில் ஒரு பாட்டில்

நீரின் விலை பத்து ரூபாய்

Wednesday, February 20, 2008

நிழலில் மறைந்த நிஜம்



தர்மபுரி செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் பாதரியார் தாமஸ், தனியாக தன் அறையில் அமர்ந்து கொண்டு ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்; அன்றைய மாலை பிரார்த்தனை முடிந்திருந்தது. அடர்த்தியான கரிய தாடி, சற்றே தடியான மூக்குக்கண்ணாடி, சில இடங்களில் சிரிக்கும் கிராப், மாநிறம், நல்ல உயரம், சற்றே மெலிந்த தேகம் முட்டி வரையில் வெள்ளை கோட் அணிந்திருந்த அவரைப் பார்த்தால் முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயதுக்குள் தான் இருப்பார் என எவரும் யூகிக்கமுடியும் கிறுத்துவ மதத்தில் நல்ல பற்று கொண்ட அவர் தனது பணிகளால் சிறு வயதிலேயே தமிழகத்தில் நன்கு மதிக்கப்படும் ஒரு பாதிரியராய் இருந்தார். ஒரு முறை இந்திய அளவில் வாடிக்கனுக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டு சென்று வந்திருக்கிறார்.


அவர் அறைக்கு பீட்டர் என்ற அத்தேவாலயத்தில் பணிபுரியும் ஊழியன் வந்து "ஃபாதர், வெளிய ஒரு பெரியவர் பாவமன்னிப்பு கேக்கணும்னு சொல்லிட்டு வந்திருக்காரு, நேரம் முடிஞ்சிடுச்சு நாளைக்கு வாங்கன்னு சொல்லிடட்டா?" என்றான். அதற்க்கு தாமஸ் "இல்லை பீட்டர், தாரளமா வரச் சொல்லு இன்னும் அஞ்சு நிமிஷத்துல நான் வந்துடறேன்" என்று கூறினார். பீட்டர் உடனே அவரை அழைத்து வர சென்றான் . தேவாலயத்திற்கு பலர் பாவமன்னிப்பிற்காக வருவது உண்டு. இவ்வாறு வருபவர்களின் பாவச்சுமையை இறக்கி வைக்க உதவுவதை தனது முக்கியக் கடமையாக தாமஸ் செய்து வந்தார். அத்தேவாலயத்தில் பாவமன்னிப்பின் பொழுது பாதரியார் அமர்வதற்காக ஒரு நாற்காலி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மிகச் சிறிய அறை இருந்தது. அறையின் ஒரு புறம் மடும் சுவரில்லாமல் வலை போன்ற ஒரு அமைப்பும் அதை ஒட்டியபடி ஒரு மெல்லிய வெள்ளை துணியும் இருந்தது. அதனை ஒட்டியபடி பாவமன்னிப்பு கேட்போருக்கான அறை இருந்தது. பாவமன்னிப்பு கேட்போரை பாதரியார் பார்க்கக்கூடாது என்ற வழக்கம் கிறுத்துவ மதத்தில் உண்டு, இதற்காகவே அந்த மெல்லிய வெள்ளைத் துணி இரு அறைகளின் இடையே வைக்கப்பட்டிருந்தது. தாமஸ் வரும் வரையில் அந்த பெரியவர் அழுதபடியே காத்திருந்தார். காத்திருக்கும் ஒவ்வொரு கணமும் அவர் மனத்தின் பாரம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவருக்கு கிட்டதட்ட அறுபது வயதிருந்திருக்கும், வெள்ளை வேட்டி, நீல நிற சட்டை அதன் மேல் மஞ்சள் நிற ஸ்வெட்டர் ஒன்று அணிந்திந்தும் அவர் உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது.


தாமஸ் பாவமன்னிபின் போது, பாதரியார் அமரும் சிறிய அறையில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்து அங்கிருந்த பல்ப் ஒன்றை எரியவிட்டார். அதை கண்டதும் பெரியவர் தன் கைகளைக் கூப்பியபடியே அந்தச் சிறிய அறையை நோக்கி வேகமாக வந்தார். அவ்வெள்ளை துணியில், தாமஸ் அமர்ந்திருப்பதின் நிழல் மட்டும் அவருக்கு தெரிந்தது. பெரியவர் வெள்ளைத் துணியை அடைந்தவுடன் அருகே முட்டியிட்டு தனது இரு கரங்களை இறுக்க கூப்பியபடியே "ஃபாதர் ஐயா, ஃபாதர் ஐயா..." என்று கூறிவிட்டு எவ்வளவு முயன்றும் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் ஓர் சிறு குழந்தையைப் போல அழத்தொடங்கினார். தாமஸ் "அழாதே மகனே, உன்னை நீயே கட்டுப்படுத்திக்கொள், தைரியமாக நீ சொல்ல வந்ததை சொல்" என்றார். பெரியவர் சிறிது நேரம் கழித்து "ஃபாதர், நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் ஃபாதர், என்னை அந்த கடவுள் சத்தியமா மன்னிக்கவே மாட்டார்" என்றார். அதற்கு தாமஸ் "இறைவன் உன்னை நிச்சயம் மன்னிப்பார், நீ அவருடைய மகனைப் போன்றவன், எந்த தந்தையோ தன் மகனுக்கு தீங்கு விளைவிப்பாரா?" என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் அந்தப் பெரியவரின் அழுகை இன்னும் அதிகரித்துவிட்டது. "இந்தப் பாவி பண்ணியிருக்கனே ஃபாதர், என் சொந்த புள்ளைக்கு நான் எவ்வளவோ கொடுமை பண்ணியிருக்கனே ஃபாதர். என்னை மாதிரி ஒரு மோசமான அப்பாவுக்கு எப்படி ஃபாதர் மன்னிப்பு?.." என்று கூறினார்.


தாமஸ் அதற்கு " சற்று விளக்கமாக கூறு மகனே" என்றார். பெரியவர் "சொல்றேன் ஃபாதர், இருபது வருஷம் முன்னாடி நான் குன்னூர்ல ஒரு பேங்க்ல வேலை செஞ்சிக்கிட்டிருந்தேன். என்னுடையது ரொம்ப சந்தோஷமான ஒரு குடும்பம், நான் என் பொண்டாட்டி அப்புறம் எங்களுக்கு ஒரே மகன், ராஜான்னு பேரு. என் மகன் அங்கேயே ஒரு ஸ்கூல்ல படிச்சிக்கிட்டிருந்தான் நான் எப்போவுமே அவன் நல்ல பெரியாளா வரனும்னு கொஞ்ச ரொம்பவே கண்டிப்பாத்தான் இருப்பேன். எனக்கு ரொம்ப பயப்படுவான், பரிட்சைல கம்மி மார்க் எல்லாம் வாங்கனான்ன என்னால பொறுத்துக்கவே முடியாது. பெல்ட்டால அவனை அடி அடின்னு மாட்டப் போட்டு அடிக்கிற மாதிரி அடிச்சுடுவேன், என் பொண்டாட்டி என்னை எவ்வளவோ தடுக்கப் பாப்பா, ஆனா அவளை தள்ளிட்டு அவனை அடிப்பேன். இதெல்லாம் நான் அவன் பெரிய ஆளா வரணும்னு தான் செஞ்சேன் அவனும் ஒரு அளவுக்கு நல்லாவே படிச்சிக்கிட்டிருந்தான்." "ஒரு நாள் கோயமுத்தூர் பேங்க்ல கொஞ்சம் பணம் கொண்டு போய் சேக்கிற வேலை இருந்தது. அன்னிக்கு நல்ல மழை பேஞ்சிக்கிட்டிருந்ததால மலை இறங்கிறது ஆபத்துன்னு சொல்லிக்கிட்டு, பணத்தை அடுத்த நாள் காலைல கொண்டு போயிடலாம்னு வீட்டுக்கு கொண்டு வந்து வெச்சிட்டேன். அன்னிக்கு வீட்டுக்கு என் மச்சானும் அவங்க குடும்பமும் வந்திருந்தாங்க. நைட் எல்லாரும் சாப்பிட்டுக்கிட்டிருந்தபோது என் பொண்டாட்டி என் கிட்ட 'ஏங்க நம்ப ராஜா க்ளாஸ்ல எல்லாரையும் டில்லி, ஆக்ரான்னு டூர் கூட்டிக்கிட்டு போறாங்களாம், அவனும் போவணும்னு ஆசைபடறான், அதுக்கு ஆயிரம் ரூபா குடுக்கணுமாம்...' என்றாள். அதுக்கு நான் 'டூரும் வேணாம் ஒரு கன்றாவியும் வேணாம். ஒக்காந்து படிடா ராஸ்கல், அவனவன் நல்லா படிச்சிட்டே க்யூல நிக்கிறான் வேலைக்கு, துரை படிக்கிற படிப்புக்கு நம்ப ஊர்லேயே கைடாத்தான் போவணும்' என்று சொல்லிட்டு சொந்தக்காரங்க முன்னாடியே அவனை கன்னா பின்னான்னு திட்டிட்டேன். அதுக்கு என் மகன் 'அம்மா, அப்பாவுக்கு என்னை புடிக்கவேயில்லைம்மா, என்னை ஏதோ ஹாஸ்டல்ல சேத்துருங்க' என்றான். அதுதான் அவன் முதன்முறை இப்படி பேசினது. எனக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு. என் சொந்தகாரங்க முன்னாடி அவன் இப்படி பேசனதை தாங்க முடியாம அவன் தட்டை கீழ தள்ளிட்டு 'முதல்ல மரியாதையா நடந்துக்க கத்துக்க, இன்னிக்கு உனக்கு சோறு கிடையாது' என்றெல்லாம் சொல்லிட்டேன். அவன் அழுதுக்கிட்டே ரூமுக்கு ஓடிட்டான்."


"அடுத்த நாள் காலை ரெடியாயிட்டு, புறப்படலாம்னும்போது பாத்தா பணத்தைக் காணலை. வீடு முழுக்கத் தேடியும் கிடைக்கவேயில்லை. எனக்கு ஒண்ணுமே புரியலை, அது ரொம்பவே முக்கியமா கொண்டு போய் சேர்க்க வேண்டியிருந்தது. ஒக்காந்து யோசிச்சபோது என் பையன் அதுக்கு முன்னாடி நாள் பணம் கேட்டதும் என்னை எதிர்த்துப் பேசினதும் தான் ஞாபகம் வந்தது. அப்போ அவன் ஸ்கூலுக்குப் போயிருந்தான். நேரா அவனை பாக்க ஸ்கூலுக்கே போயிட்டேன். அவன் க்ளாஸிலிருந்து அவனை வெளியே கூப்பிட்டு அதைப்பத்தி கேட்டதுக்கு அவன் எடுக்கலைன்னு சொன்னான். என்னாலை வேற ஒன்னும் யோசிக்க முடியலை. அவன் மேல இருந்த கோபம், என்னோட டென்ஷன் எல்லாம் சேர்ந்து என்னை மூர்க்கனாக்கியிடுச்சு, அவனை அடி அடின்னு அங்கேயே அடிச்சிட்டேன். அவன் அங்கிருந்த செவுத்துல இடிச்சு ஏதோ குத்தி நெத்தியிலிருந்து ரத்தம் எல்லாம் வந்து மயக்கம் போட்டுட்டான். அவன் டீச்சர் வந்து என்னைத் தடுக்கலைன்னா அவனை அங்கேயே கொன்னுருப்பேன்னு நினைக்கிறேன்" என்று கூறி மீண்டும் அழ ஆரம்பித்தார்


தன்னை தானே தேர்த்திக் கொண்டு "பையனை ஆஸ்பத்திரிக்கு கூட்டுபோயிட்டு பின்ன வீட்ல விட்டேன், பெரிசா ஒண்ணும் ஆவலைன்னு சொல்லிட்டு நெத்தியில மட்டும் தையல் போட்டாங்க. காசெல்லாம் சேத்து எப்படியோ பணத்தை தேத்தி அன்னிக்கு சாயங்காலமே பேங்க்ல போய் சேத்துட்டேன். தாமதத்தால என்னை பேங்க்ல திட்டு திட்டுன்னு திட்டுனாங்க. ரொம்ப எரிச்சலா வீட்டுக்கு திரும்ப வந்தா பொண்டாட்டி வீட்டுக்கு வெளியே ஒக்காந்து அழுதுக்குட்டிருந்தா விசாரிச்சப்போ பையனை மதியத்திலிருந்து வீட்ல காணவே காணம், எங்கெங்கேயோ தேடியும் கிடைக்கலைன்னு சொன்னா. அப்பவும் ஒரு முட்டாளாட்டம் 'எங்க போக முடியும், வந்திருவான், வரலைன்னாலும் பரவாயில்லைன்னு' சொல்லிட்டுப் போயிட்டேன். ராத்திரிக்கூட வரலை. அப்போதுதான் பயமே வந்துச்சு, போய் எங்கெங்கேயோ தேடினேன் கிடைக்கலை, பேப்பர்ல டி.வி ல எல்லாம் கூட போட்டாவெல்லாம் போட்டோம், ஒண்ணும் பயனேயில்லை. என்னை சுத்தியிருக்கவங்க எல்லாம் என்னை திட்டு திட்டுன்னு திட்னாங்க. நான் மாத்தல் வாங்கிட்டு இந்த ஊருக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி அழுது அழுதே தன் வாழ்க்கைய கரைச்சு பத்து வருஷம் முன்னாடி செத்துட்டா. தனியா நடந்ததை எல்லாம் நினைச்சுக்கிட்டு வாழ்ந்துக்குட்டு வந்தேன். போன வாரம் மச்சான் சாவற நிலைமைல இருக்கார்னு அவரைப் பாக்கப் போயிருந்தேன். அங்க என் மச்சான் என் கிட்ட ஏதோ தனியா சொல்லனும்னு சொன்னாரு, கேட்டா "மாப்பிள்ளை, என்னை மன்னிச்சிடு நான் உனக்கு ரொம்பப் பெரிய துரோகம் பண்ணிட்டேன்னு" சொன்னார். என்னய்யா சொல்றேன்னு கேட்டா 'இருவது வருஷம் முன்னாடி உன் வீட்ல பணம் எடுத்தது நாந்தான்னு' சொன்னான்" மீண்டும் அழுதார்.


"என்ன பண்ண முடியும்? சாவப்போறவனை அடிச்சு கொலை பண்ணவா முடியும்? அவனை ஏதோ பண்ணாத்தான் என் பையன் கிடைச்சிடுவானா? எனக்கு அவன் மேல வந்த கோவத்தை விட என் மேலதான் கோவம் வந்துச்சு. என்னை மாதிரி ஒரு மிருகத்தை மன்னிக்கவே முடியாது. நான் ஒரு பாவி ஃபாதர், பாவி" என்று கூறி தன்னைத் தானே அடித்துக்கொண்டே கத்தி அழத் தொடங்கினார். தாமஸ் அவரிடம் "கலங்காதே மகனே, இது இறைவனின் சபை, உனக்கு நிச்சயம் மன்னிப்பு உண்டு" என்று கூறினார். பெரியவர் தன்னைத் தானே தேத்திக் கொண்டார். "இன்றிலிருந்து நீ உன் அனைத்து பாவங்களிலிருந்து பாவ விமோசனம் பெற்று விட்டாய். உன் வாழ்கையை குற்ற உணர்வு இல்லாமல் கழி, இறைவன் உன்னை ரட்சிப்பார்" என்றார். பெரியவர் அழுதுக்கொண்டே "கடவுளே என்னை மன்னிச்சாலும் என் பையன் என்னை மன்னிக்கமாட்டான் ஃபாதர்" என்று கூறியபடி தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு வெளியேறினார். பீட்டர் சிறிது நேரம் கழித்து தாமஸின் அரைக்கு வந்தான். "ஃபாதர் நான் கிளம்பட்டுமா?" என்று கேட்டான். அப்போழுது நெற்றியிலிருந்த தழும்பைத் தடவியபடியே அழுது கொண்டிருந்தார். தன் தந்தையை 'மகனே' என்று அழைத்து, தன் தந்தை தன்னை 'ஃபாதர்' என அழைத்ததை கேட்ட தாமஸாக மாறியிருந்த ராஜா.

Friday, February 15, 2008

மனிதர்கள் ஜாக்கிரதை


அன்று முகுர்த்த நாள் என்பதால் சைதாப்பேட்டை பஜாரில் வழக்கத்தை விட மிக அதிகமாகவே மக்கள் கூட்டம் காணப்பட்டது, அங்குள்ள பூக்கடைகளில் பலர் மாலைகளும் பூக்களுமாக வாங்கிக் கொண்டிருந்தனர். முத்து மிக மௌனமாக நடப்பவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் . அவன் பஜாருக்கும் அண்ணா சாலைக்கும் இடையில் உள்ள உட்லான்ட்ஸ் ஹோடேலில் தங்கியிருந்தான். அன்றுடன் அவன் அங்கு வந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன. இதற்கு முன் முத்து மேற்கு சைதையில் உள்ள ஒரு செல்வந்தர் வீட்டில் சில வருடங்களாக பணியற்றிக்கொண்டிருந்தான் . ஆரம்ப காலத்தில்அவன் முதலாளி அவனை தன் சொந்த பிள்ளை போலவே பாவித்தார் . நாளடைவில்வியாபரத்தில் அவர் சந்தித்த சரிவுகள் அவர் குணத்திலும் பிரதிபலிக்கத்தொடங்கின . மூர்க்கரானர், தன் கோபத்தை வெளிக்கொண்டுவர திசை அறியாமல் அதனை முத்துவின் மீதும் பிறர் மீதும் காட்டத் தொடங்கினார் .தினம் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு முத்துவை பெல்ட்டினால் அடிப்பதும் ,அவன்மேனியில் சிகரெட்டினால் சூடு போடுவதும் அவர் கோபத்தை தணிக்க உதவின.கேட்பார் யாருமிலாமல் முத்து தன் வலிகளைப் பொறுத்துக்கொண்டு ஒரு விடியளுக்காக் காத்திருந்தான்.

ஒரு நாள் எதிர் பிளாட்டில் புதிதாக லக்ஷ்மி என்ர்ரூருவால்l வேலைக்குசேர்ந்திருபதை அறிந்தான். தன் முதலாளி பணிக்கு சென்ற பின் அவளைசந்திப்பது அவனுக்கு ஓர் மன அமைதியை கொடுத்து. தன்னை போல் லக்ச்மியும்பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள் என்பதை அறிந்தான் .செய்வதறியாது இருவரும்தங்கள் நாட்களை கடத்தினர் . நான்கு நாட்களுக்கு முன்னர் முத்துவும் லக்ஷ்மயும் வழக்கம்போல்சந்தித்து பேசிக்கொண்டிருப்பதை முத்துவின் முதலாளி பார்த்தான். தன் முழுபலத்துடன் முத்துவின் வயிற்றில் ஓர் உதை உதைத்தான். முத்து கதறியபடிஅருகில் இருந்த சுவற்றில் மோதி கீழே விழுந்தான் .அவன் அலறல் கேட்டு எதிர்வீட்டாரும் வெளியே வந்தனர் .அவர்களைப் பார்த்து முத்துவின் முதலாளி 'இந்தகன்றாவிக்குத் தான் இத்தைஎல்லாம் இட்டாந்தீகளா?' என்று லக்ஷ்மியைசுட்டிக்காட்டியபடி கேட்டான் .'மருவாதயா ஊட்டுகுள்ளேயே பூட்டிவெச்சுக்குங்க ,இல்லாங்காட்டி கலீஜா பூடும் ' என்றான் .அதற்குலக்ஷ்மியின் முதலாளி 'அங்க மட்டும் ரொம்ப ஒழுங்கு ,மூட்டுப்போட பேமானி'என்றார் .லக்ஷ்மியை பார்த்து 'வா சனியனே ,உன்னால நான் கண்ட கசுமலதுகிடஎல்லாம் பேச வேண்டிகிது ' என்று கோரி அவளை தரதரவென விடுகுள் இழுத்துச்சென்று கடவை பூட்டினர். நான்கு நாட்களாக எந்த வித பயமுமில்லாமல் நிமடியாக தன் நேரத்தைமுத்து கடத்தினான் .காலை ஒன்பது மணியானது ,எதிரில் உள்ள மீன்மார்க்கெட்டில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.அங்கிருந்து இரண்டு கட்டங்கள் தள்ளி இருந்த திருமணப் பதிவு நிலையத்தில்பல புதுமணத் தம்பதியினர் வண்டு தங்கள் திருமணத்தை பதிவு செய்து,எதிர்காலக் கனவுகள் கண்ணில் மினியபடி உற்சாகமாக திரும்பி சென்றுகொண்டிருந்தனர் . இதைப் பார்த்தும் லக்ஷ்மியின் நினைவு முத்துவிற்கு வந்தது .பல முறைஅவர்கள் இருவரும் இணைந்து தனியே நிம்மதியாக வாழ்வது குறித்து பேசியதருணங்கள் அவன் நினைவிற்கு வந்தன .லக்ச்மிக்கு கடந்த நான்கு நாட்களில்என்ன நடந்திருக்குமோ என்ற எண்ணம் அவனை வருத்தியது .எவ்வாறாவது அவளைஅழைத்து வர வேண்டும் என முடிவு செய்து அவன் வசித வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினான் . ஜீனிஸ் ரோடு வழியாக ரயில்வே கேட்டைத் தாண்டி நடந்தான் .ரோட்டில்எச்சில் உமிழ்வது சைதை மக்களின் பிரதான பொழுதுபோக்கு .மிக கவனமாகஅவற்றின் மீதெல்லாம் கால் படாமல் நடந்து இறுதியில் தன் வீட்டை அடைந்தான்.தன் முதலாளியின் கார் இல்லத்தை கண்டன் .வாட்ச்மன் வழக்கம் போல் பக்கத்துகடைக்காரனிடம் பேசிக்கொண்டிருந்தான் .மெதுவாக சத்தம் போடாமல் ,தன்னுடையஎதிர் பிளாட்டின் திறந்த கதவினுள் நுழைந்தான் .அங்கு லக்ஷ்மி ஒரு கயிறால்கட்டப் பட்டிருந்தாள் ,அவளது அழகான முடி பல இடங்களில்வெட்டப்பட்டிருந்தது .அவளின் இந்த நிலை முத்துவின் கண்களை தெப்பம் ஆக்கின. முத்துவைக் கண்டு லக்ஷ்மி எழ முயன்றாள் ஆனால் கயிறுகள் அவளைத்தடுத்தன .முத்து விரைவாக முடிச்சுகளை அவிழ்த்தான் .வீட்டின்அறையிலிருந்து யாரோ வருவது போன்ற சத்தம் கேட்க இருவரும் பிளாட்டை விட்டுவெளியே சென்றனர் .வாட்ச்மன் இன்னுமும் பேசிக்கொண்டிருந்தான் .ஏதோ சத்தம்கேட்டு முத்து திரும்பிப் பார்த்தான், அவன் முதலாளியின் வீட்டுbalconyill இருந்து புதிதாக ஒரு நாய் எம்ப முயன்று கொண்டிருந்தது .அந்தஅப்பர்ட்மென்ட் கேட் இல் இருந்த 'நாய்கள் ஜாக்கிரதை ' என்ற வாசகமும்அதற்கான படமும் கொண்ட பலகையைக் பார்த்து ஏளனமாய் சிரித்தான் முத்து.வடுக்களை மனதிலும் உடலிலும் சுமந்தபடி எதிர்காலத்தை நோக்கி அந்த இரண்டுநாய்களும் சென்றன.