Tuesday, July 8, 2008

முதலில் நனைந்த மழை


மழை என்றால் மேலிருந்து தண்ணீர்

நிற்காமல் வருமாம்

அந்த மாயத்தை இதுவரை

கண்டதில்லை நானும்


ஊரிலுள்ள தண்ணீர் குழாய்கள் அனைத்தும்

வற்றிய போதும்

இன்றுவரை வற்றவிலை என் தாயின்

கண்ணீர் குழாய்கள்


வானம் பார்த்து வானம் பார்த்து

சலித்த எங்கள் நிலங்கள்

மாறி வருகின்றன எங்கள்

விவசாயிகளின் இடுகாடுகளாய்


எங்கள் மனங்களைப் போல்

எங்கள் நிலஙளும் வெடி

வைத்தார் போல்

பிளந்து கிடக்கின்றன


விவசாயிகள் விவசாயத்தை மறக்கும் நிலை

ஏருகளில் இரும்பெல்லாம் துருபிடிக்கும் நிலை

நம்பிக்கையற்றுப்போய் பயிர்கள்

வானைக் காணமறுக்கும் நிலை


பல ஊர்களுக்கு அன்னமிட்ட

எங்கள் கிராமம்

இன்று நிற்கிறது திருவோடு

ஏந்தி


உழவர் திருநாளன்றும் இரண்டு

உழவர்கள் த்ற்கொலை

மாட்டுப் பொஙலன்றும்

பலமாடுகள் பட்டினி


எங்கள் மாடுகளுக்கு கொம்புகள்

கூட சுமையாயின

ஜல்லிக்கட்டு நடத்தியிருந்தால் அவைகளே

போரட்டம் நடத்தியிருக்கும்


நீர் வசதி இதோ வரும்

அதோ வரும் எனக் கூறி

வந்து சென்றன

இரு தேர்தல்கள்


ஆண்டிற்க்கிருமுறை மழை வர

யாகம் செய்தும் தணியவில்லை

எஙள் நிலங்களின்

தாகம்


மரம் வளர்த்தால் மழை

பொழியுமாம்

மரம் வளர்க்க மழை

வேண்டுமே!!


ஊருக்கு அப்பால் இருக்கிறது

தண்ணீர் கிணறு ஒன்று

நீர் கொண்டு வரும் வழியிலே

பாதி குடித்திடுவான் பகலவன்


தண்ணீரை சிக்கனமாய்ப் பயன்படுத்துவதில்

வல்லவர்கள் நாஙள்

காகஙளும் எங்கள் குளியலைக்

கண்டால் வாயைப் பிளக்கும்


எங்களை வைத்து மனித உடலின்

எலும்புகளை எண்ணி விடலாம்

காற்றை மட்டும் சுவாசிது

வாழும் ஜீவஙள் நாஙள்


நாளிற்க்கிருமுரை வானையும் மண்ணையும்

வணங்கிய எங்கள்

தாதாவிற்க்கு கூன் விழுந்தது

தான் மிச்சம்


அவர் மாண்டபொது

அவருடனே மாண்டன

நிலத்திலும் விவசாயத்திலும் இருந்த

எங்கள் நம்பிக்கை


நிலத்தை ஜமீந்தாரிடமும் மாடுகளை

கசாப்புக் கடையிலும் விற்றோம்

மிஞ்சியிருந்த எஙள் சொத்தை மூட்டைக் கட்டினோம்

ஒரு சிறிய மஞ்சள் பையில்


மாடுகளை விற்ற நாஙள்

ஆயத்தமானொம்

அடி மாடுகளாய் வேலை

செய்ய


பேருந்திற்காக காத்திருந்தபோது ஓர்

பெரும் ஓசையைக் கேட்டேன்

என் வாழ்வில் முதல் முறையாக

வானிலிருந்து நீர் வடிவதைக் கண்டேன்


மழையைக் காணமாட்டேன் என

தன் இரு கண்களையும்

பொத்திக் கொண்டார் என்

அப்பா


என் தாயின் முகத்தை மழை

நனைத்ததில்

அவள் கண்ணீர் எனக்குத் தெரியாமல்

போனது


திரும்பி செல்ல எங்களிடம்

நிலமில்லை மாடுகளில்லை

உடலில் வலுவில்லை முக்கியமாக

விவசாயத்தில் நம்பிக்கையும் இல்லை


ஏற்கனவே நிறம்பியிருந்த பேருந்தில்

நாங்களும் ஈக்களாய் தொற்றிக் கொண்டோம்

ஒழுகும் மழை நீரைக் கையிலேந்தி

விளையாடிய தம்பியை அரைந்தார் அப்பா


நடத்துனரிடம் நனைந்த ரூபாய்

நோட்டுகளைக் கொடுத்து

எவ்வளவு தொலைவு செல்ல முடியுமோ

செல்லச் சொன்னார்


தண்ணீர் பஞ்சத்திற்க்கு அஞ்சி

தஞ்சம் புகுந்த

புது ஊரில் ஒரு பாட்டில்

நீரின் விலை பத்து ரூபாய்